புதுடில்லி, மார்ச் 27- ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவர் சங்கத் தேர்தலில் தலைவர், துணைத்தலைவர், துணைச் செயலாளர் ஆகிய இடங்களில் இடதுசாரி கூட்டணி வெற்றி பெற்ற நிலையில், பொதுச் செயலாளராகத் தனியாகப் போட்டியிட்ட அம்பேத்கரிய மாணவர் அமைப்பான BAPSA- வின் (Birsa Ambedkar Phule Students Association) வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். ஜே.என்.யு. வரலாற்றில் முதல் முறையாக ஒரு அம்பேத்கரிய மாணவர் அமைப்பு முக்கிய நான்கு பொறுப்புகளில் ஒன்றான பொதுச் செயலாளராக வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.