தொண்டறத்தாய் அன்னை மணியம்மையார் அவர்களின் 105ஆவது பிறந்த நாளை முன் னிட்டு 10.3.2024 ஞாயிற்றுக்கிழமை காலை சரியாக 9 மணிக்கு தஞ்சா வூர் வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக நுழைவு வாயிலில் அமைந்துள்ள அன்னை மணி யம்மையார் சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார்கள்.
தஞ்சை மாவட்ட திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், மகளி ரணி, மகளிர் பாசறை, தொழிலாளரணி, வழக்குரைஞரணி மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் பங்கேற்று சிறப்பிக்குமாறு கனிவுடன் வேண்டுகிறோம்.
குறிப்பு: மார்ச் 10, காலை 9.30 மணிக்கு தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள தந்தை பெரியார் சிலை அருகிலும் காலை 10 மணிக்கு தஞ்சாவூர் கீழராஜவீதி பெரியார் இல்லத்திலும் தஞ்சை மாநகர திராவிடர் கழகம் சார்பில் அன்னை மணியம்மையார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும்.
இவண்: சி.அமர்சிங் (மாவட்டத் தலைவர்,
அ.அருணகிரி, (மாவட்ட செயாளர்)
ஏற்பாடு: தஞ்சாவூர் மாவட்ட திராவிடர் கழகம்