மயிலாடுதுறை கழகத் தோழர் ஜி.கே.மணிவேல் படத்திறப்பு

0 Min Read

மயிலாடுதுறை கழகத் தோழர் ஜி.கே.மணிவேல் கடந்த 12-2-2024 அன்று மறைவுற்றதைத் தொடர்ந்து இன்று 27-2-2024 காலை நினைவேந்தல் படத்திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. திராவிடர் கழக மாவட்ட தலைவர் கடவாசல் குணசேகரன் நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்க மாவட்ட செயலாளர் கி.தளபதிராஜ் படத்தை திறந்து வைத்தார். நகர தலைவர் சீனி.முத்து, செயலாளர் பூ.சி.காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அமைப்பாளர் ஞான.வள்ளுவன், பகுத்தறிவாளர் கழக செயலாளர் தங்க.செல்வராஜ் மற்றும் கழக தோழர்கள், உறவினர்கள், நண்பர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *