மாநிலங்களவைத் தேர்தல் சோனியா காந்தி வேட்புமனு தாக்கல்

2 Min Read

ஜெய்பூர், பிப். 14- மாநிலங்களவை தேர் தலில் போட்டியிட சமாஜ்வாடி கட்சியில் ஜெயா பச்சன் உள்ளிட்ட மூவர் வேட்பு மனுத் தாக்கல் செய் துள்ளனர்
நாடெங்கும் உள்ள 15 மாநிலங் களில் 56 நாடாளுமன்ற மாநிலங்க ளவை நாடாளுமன்ற உறுப்பினர்க ளின் பதவிகாலம் முடிவடைவதால், அந்த இடங்களுக்கான தேர்தல் வருகிற 27 ஆம் தேதி நடைபெறு கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் செய்ய நாளை (15.2.2024) கடைசி நாளாகும். உத்தரப்பிர தேசத்தில் இருந்து சமாஜ்வாடி கட்சி சார்பில் மாநிலங்களவைக்குப் போட்டியிடும் 3 வேட்பாளர்களை அந்தக் கட்சி நேற்று (13.2.2024) அறிவித்தது.

அந்த பட்டியலில் பிரபல நடிகர் அமிதாப்பச்சனின் மனைவி ஜெயா பச்சன், ஓய்வு பெற்ற அய். ஏ.எஸ். அதிகாரியான அலோக் ரஞ்சன் மற்றும் ராம்ஜிலால் சுமன் ஆகியோர் பெயர்கள் அந்த பட் டியலில் இடம் பெற்று இருந்தன. அவர்கள் 3 பேரும் சட்டசபை வளாகத்தில் தேர்தல் அதிகாரியி டம் வேட்புமனுக்களைத் தாக் கல் செய்தனர். அவர்களுடன் கட்சி தலைவர் அகிலேஷ்யாதவ் உள் ளிட்டோர் இருந்தனர். தற்போது உத்தரப்பிரதேச சட்டசபையில் சமாஜ்வாடி கட்சிக்கு தற்போது 108 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளதால் அந்த கட்சியால் 3 பேரை மாநிலங்களவை நாடாளு மன்ற உறுப்பினர். ஆக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜஸ்தானில் 3 மாநிலங்க ளவை இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதில் 2 இடங்கள் பாஜகவுக்கும், ஓர் இடம் காங்கிரசுக்கும் கிடைப்பது உறு தியாகியுள்ளது. மேனாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்குப் பதிலாக காலியாக உள்ள மாநிலங்களவை பதவிக்கு மேனாள் தலைவர் சோனியா காந்தியை தேர்வு செய்ய காங்கிரஸ் தயாராகி வருகிறது.

ராஜஸ்தானில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட சோனியா காந்தியின் பெயரை காங்கிரஸ் முன்வைத்துள்ள நிலையில் மாநி லங்களவை வேட்புமனு தாக்கல் செய்வதற்காக சோனியா காந்தி இன்று (14.2.2024) ஜெய்ப்பூர் வர லாம் என தகவல்கள் தெரிவிக்கின் றன. சோனியா காந்தியை வரவேற்க அனைத்து காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களும் ஜெய்ப்பூருக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *