ஆதித்யா எல்-1 16 நொடிகளில் நடந்த மாற்றம்!

Viduthalai
1 Min Read

இஸ்ரோ வெளியிட்ட அறிவிப்பு

அரசியல், இந்தியா

பெங்களூரு அக்.9 ஆதித்யா எல்1னின் தற்போதைய நிலை குறித்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தகவல் வெளியிட்டுள்ளது.

இஸ்ரோ நிறுவனத்தினால், சூரியனை ஆராய்ச்சி செய்வ தற்காக பி.எஸ்.எல்.விசி 57 ராக்கெட் மூலம் விண்கலன் ஆதித் யா-எல்1 விண்ணில் ஏவப்பட்டது.

குறித்த விண்கலம் செப்டம்பர் 30 அன்று பூமியின் தாக்கத்திலிருந்து விடுபட்டு சூரியனுக்கும் பூமிக்கும் இடையேயான பாதை யில் அது அடையவேண்டிய இலக்கான முதல் லெக்ராஞ்சியன் புள்ளி எனப்படும் எல்1 புள்ளியை நோக்கி பயணித்து கொண்டிருந்த தாக இஸ்ரோ இதற்கு முன்னர் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், ஆதித்யா-எல்1 விண்கலத்தின் செயல்பாடு திட்ட மிட்டபடி நன்றாக உள்ளதாகவும் தனது பயண தடத்தில் அது செய்து கொள்ள வேண்டிய மாற்றங் களுக்கான ஒரு நடவடிக்கையான “டிராஜக்டரி கரெக்சன் மென்யூவர்”  (Trajectory Correction Maneuver)   வழிமுறையை 17.10.2023இல் 16 நொடிகளில் வெற்றிகரமாக செய்து முடித்ததாகவும் குறிப் பிடப்பட்டுள்ளது.

மேலும், ஆதித்யா எல்1, தனது இலக்கை அடைவதற்கு முன்பு கடந்த செப்டம்பர் 19 அன்றே டிரான்ஸ் -லெக்ராஞ்சியன் புள் ளியை தொடுதல் நடவடிக்கையும் முறையாக நடைபெற்றதாக தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து ஆதித்யா விண்கலன், தான் செல்ல வேண்டிய பாதையில் சரியான திசையில் வெற்றிகரமாக சென்று கொண்டிருப்பதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *