பணமோசடி தடுப்பு சட்டத்தை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துகிறது: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

1 Min Read

புதுடில்லி,பிப்.7- டில்லியில் யூடியூப் சேனல் ஒன்றின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேனாள் ஒன்றிய நிதி யமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் மாநி லங்களவை உறுப்பினர் கபில் சிபில் ஆகிய இருவரும் கலந்து கொண்டு பேசினர்.
அப்போது பணமோசடி தடுப்பு சட்டத்தை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துவதாக ப.சிதம்பரம் குற்றம் சாட்டினார். இது குறித்து அவர் பேசுகையில், “பணமோசடி தடுப்பு சட்டம் ஒரு புலனாய்வு முகமையின் மீது தன்னிச்சையான மற்றும் தடை யற்ற அதி காரத்தை வழங்கியுள்ளது. இது மற்ற அனைத்து விசாரணை நிறுவனங்களையும் விட மிகவும் சக்தி வாய்ந் தது. ஆனால் அந்த சட்டம் தற்போது முற்றிலும் தவறாக பயன் படுத்தப்பட்டு வருகிறது. அதனால் தான் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்த சட்டத்தை ரத்து செய்து விட்டு சிறந்த சட்டத்தை மீண்டும் இயற்றுவோம் என்று கூறி வருகி றேன்.” -இவ்வாறு மேனாள் ஒன் றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *