காஞ்சிபுரம் அண்ணா புற்றுநோய் மருத்துவமனையில் ரூபாய் 16.80 கோடி மதிப்பில் நவீன கருவிகள்

2 Min Read

காஞ்சிபுரம்,ஜன.29- காஞ்சிபுரம் மாவட்டம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், காரப்பேட் டையில் உள்ள அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனையில் ரூ.16.80 கோடி மதிப்பிலான புதிய மருத்துவ உபகரணங்களை சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் மக்களின் பயன்பாட்டுக்குத் திறந்துவைத்தனர்.

காஞ்சிபுரம் அடுத்த காரப்பேட்டை யில் அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை செயல் பட்டு வருகிறது. இம்மருத்துவமனை, கடந்த 1969-ஆம் ஆண்டு தொடங்கப் பட்டது. இங்கு, காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட் டங்களில் புற்றுநோயால் பாதிக்கப் பட்ட நபர்களுக்குச் சிகிச்சை அளிக் கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் இம்மருத்துவமனையில் ரூ.12 கோடி மதிப்பில் பெட் சிடி ஸ்கேன் எனப்படும் புதிய கதிரியக்க பரிசோதனை உப கரணம், ரூ.1.62 கோடி மதிப்பில் எச்.டி .ஆர். அண்மைக் கதிர்வீச்சு சிகிச்சை கருவி, ரூ.27 லட்சம் மதிப்பில் கிரை யோஸ்டாட் ஆய்வக பரிசோதனைக் கருவி, ரூ.18.80 லட்சம் மதிப்பில் திரவ மருத்துவ ஆக்ஸிஜன் கருவி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

இவற்றை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச் சர் தா.மோ.அன்பரசன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் ஆகியோர் நேற்று (28.1.2024) பொதுமக்கள் பயன்பாட்டுக்காகத் திறந்துவைத்தனர்.

மேலும், ரூ.60 லட்சம் மதிப்பில் காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை அரங்கு, ரூ.50 லட்சம் மதிப்பில் திருப்புட்குழியில் வட்டார பொது சுகாதார ஆய்வகம், ரூ.60 லட்சம் மதிப்பில் எழிச்சூரில் புறநோயாளிகள் பிரிவு மற்றும் வட்டார பொது சுகாதார ஆய்வகம், ரூ.30 லட்சம் மதிப்பில் கரசாங்கால் மற்றும் தெற்கு மலையம் பாக்கத்தில் துணை சுகாதார நிலையம் மற்றும் சிறுதாமூரில் ரூ.60 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட துணை சுகாதார நிலையம் ஆகியவற்றையும் அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.
இதைத் தொடர்ந்து, கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் 7 மாணவர்களுக்குக் கண் கண்ணாடியும், 5 கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து தொகுப்புகளையும் அமைச்சர்கள் வழங்கினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *