சென்னை, ஜன, 19 சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் இயங்கி வரும் டாக்டர் எம்.ஜி.ஆர். – ஜானகி மகளிர் கலை – அறிவியல் கல்லூரியின் வளாக வெளிப்புறத்தில், திருமதி பி. கீதா மற்றும் சிலரால் மாட்டுப் பண்ணை ஒன்று நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் பண்ணையில் இருந்து வெளியேறும் கழிவு நீரானது கல்லூரியில் உள்ள கிணற்றில் கலப்பதால், கல்லூரி மாணவிகள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். மாட்டுப் பண்ணையின் கழிவுநீர் சட்டவிரோதமாக அடையாறு ஆற்றில் நேரடியாக விடப்படுகிறது. இதனை அடுத்து அக்கம்பக்கத்தினர் கொடுத்த புகாரின் பேரில், பெருநகர சென்னை மாநகராட்சியின் அடையாறு மண்டல நல அலுவலர், மாட்டுப் பண்ணை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
அதில், மாட்டுப் பண்ணை அமைப்பதற்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும், கழிவு நீரை சுகாதார முறையில் வெளியேற்றவும், கழிவுகளை சுகாதார பாதிப்பின்றி அகற்றவும் உத்தரவிட்டுள்ளது.
மாட்டுப் பண்ணை கழிவு நீரால் கல்லூரி மாணவிகள் அவதி! சென்னை மாநகராட்சி நோட்டீஸ்!
Leave a Comment