தமிழ்நாட்டு மீனவர்கள் 10 பேர் கைது

viduthalai
0 Min Read

நாகை, ஜன.17 தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைப்பிடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த நிலையில், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி நாகையை சேர்ந்த மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.. மேலும், மீனவர்களின் விசைப் படகையும் பறிமுதல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட 10 மீனவர்கள் பருத்திதுரை நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். 10 பேரை யும் ஜன.29 வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து தமிழ்நாடு மீனவர்கள் 10 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *