அய்.அய்.டி. மாணவர்கள் இஸ்ரோவில் இணைய முன் வர வேண்டும் இஸ்ரோ தலைவர் வலியுறுத்தல்

1 Min Read

மும்பை,ஜன.11- இந்திய விண் வெளி ஆராய்ச்சிக்கழகத்தில் (இஸ்ரோ) அய்அய்டி மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் இணைய வேண்டும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் வலியுறுத்தி யுத்தியுள்ளார்.
சமீபத்தில், பாம்பே அய்அய்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சோம்நாத் கலந்துகொண்டு பேசினார். அப் போது அவர், விண்வெளித் துறை யின் போக்கு குறித்தும், இஸ்ரோ முன்னெடுத்து வரும் புதிய ஆராய்ச்சி திட்டங்கள் குறித்தும் பேசினார்.
அய்அய்டி மாணவர்கள் இஸ் ரோவில் இணைய வேண்டியதன் அவசியத்தையும் அவர் முன்வைத் தார்.
“நிலவில் சந்திரயான் தரையிறங்கிய பிறகு, மக்களிடையே விண்வெளி ஆராய்ச்சி குறித்த ஆர் வம் அதிகரித்து இருக்கிறது.
விண்வெளி ஆராய்ச்சியில் புதிய பாய்ச்சலை நிகழ்த்தும் திட் டங்களை இஸ்ரோ முன்னெடுத் துள்ளது. இளைய தலைமுறையினரே புதிய ஆராய்ச்சிகளை முன்னெடுத்து செல்ல உள்ளனர்.

நம் நாட்டில் திறன்மிக்க பொறி யாளர்கள் பெரும்பான்மை யாக அய்அய்டி-களிலிருந்து உருவாகி வருகின்றனர். எனவே, அய்அய்டி மாணவர்கள் இஸ்ரோவில் இணைந்து நாட்டுக்காக பணியாற்ற முன்வர வேண்டும்” என்று தெரிவித்தார்.
ஊதிய அளவு காரணமாக அய்அய்டி மாணவர்கள் இஸ்ரோ வில் சேர ஆர்வம் காட்டுவதில்லை என்று கடந்த ஆண்டு ஒரு பேட்டி யில் சோம்நாத் தெரிவித்திருந்தார்.
‘‘சிலர் மட்டுமே இஸ்ரோவில் இணைய ஆர்வம் காட்டுகின்றனர். பெருவாரியானவர்கள், ஊதியத் தைப் பார்த்துவிட்டு இஸ்ரோவில் இணையும் எண்ணத்தை விட்டு விடுகின்றனர்” என்று அவர் குறிப் பிட்டார்.
இந்நிலையில், அதிக எண்ணிக் கையில் அய்அய்டி மாணவர்கள் இஸ் ரோவில் இணைய வேண்டும் என்று அவர் தற்போது வலியுறுத்தி யுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *