தாம்பரம் மாவட்ட திராவிடர் கழக துணைத் தலைவர் தோழர் அனகாபுத்தூர் கு.ஆறுமுகம் உடல் நலம் குன்றி சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 8.1.2024 அன்று மாலை 5.30 மணியளவில் தோழர் கு.ஆறுமுகத்தை கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் நலம் விசாரித்தார். தாம்பரம் மாவட்ட தலைவர் ப.முத்தையன் மற்றும் தாம்பரம் நகர செயலாளர் சு.மோகன்ராஜ் ஆகியோர் உடனிருந்தனர். தோழர் அவர்கள் தற்போது நல்ல நிலையில் தேறி வருகிறார். வி.கனிமொழி, அ.தமிழ்ச் செல்வன் மற்றும் உறவினர் பரிமளா ஆகியோர் உட னிருந்து கவனித்து வருகிறார்கள்.
மருத்துவமனை சிகிச்சையில் கழகப் பொறுப்பாளர், கழகப் பொதுச் செயலாளர் நலன் விசாரிப்பு
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books