பா.ஜ.க. ஆளும் உ.பி.யில் அதிர்ச்சி ரூ.40,000க்கு போலி பட்டங்கள் விற்பனை!

Viduthalai
1 Min Read

அரசியல், இந்தியா

லக்னோ,அக்.19 – உத்தரப் பிரதேச மாநிலம் சாப்ராவைச் சேர்ந்த விஷ்ணுபிர சாத் சவுபே மற்றும் பீகா ரின் அரா வைச் சேர்ந்த ரவிகாந்த் திவாரி ஆகிய  இருவரின் கல்வி சார்ந்த பட்டங்கள் சந்தேகத்திற் குட்பட்டது என கண்டு பிடிக்கப்பட்டது. 

விசாரணையில் இரு வரது பட்டமும் பாஜக ஆளும் உத்த ரப்பிரதேச மாநிலம் ஜான்பூர் மாவட் டத்தில் உள்ள பூர்வாஞ்சல் பல்கலைக் கழகத்தில் இருந்து பெறப்பட்டது என தெரியவர, சம்பந்தப்பட்ட பல்க லைக்கழகத்திற்கு ஆதா ரத்துடன் புகார் அனுப்பப்பட்டது. பல்கலைக்கழக நிர்வாக குழுவின் விசாரணையில் சந்தோஷ் திவாரி,  அனில் சிங் என்ற 2 பல்கலைக்கழக ஊழியர்கள் தரகர் மூலம் போலி பட்டங்களைத் தயார் செய்து விற்பனை செய்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 

விஷ்ணு பிரசாத் சவுபே, ரவிகாந்த் திவாரி ஆகியோரிடம்  பி.எட் மற்றும் பி.பார்ம் போலி  பட்டங்களை 40,000 முதல் 50,000 ரூபாய்க்கு பல்கலைக்கழக ஊழியர் கள்  விற்றுள்ளனர். இந்த விவகாரம் குறித்து  சராய் குவாஜா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப் பட்டது. 

மேலும் இந்த விவகாரத்தை விசாரிக்க பூர் வாஞ்சல் பல்கலைக்கழக நிர்வாகம் 3 பேர் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்துள்ள நிலையில், உத்தரப்பிர தேசத்தில் போலி பட்டம் விற்பனை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக நாடுமுழுவதும் மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *