வாழ்க இனமானப் பேராசிரியர்!

1 Min Read

திராவிடர் இயக்கத்தின் ஈடு இணை யற்ற இனமானப் பேராசிரியர் மானமிகு க.அன்பழகனாரின் 102 ஆவது பிறந்த நாள் இன்று! (19.12.2023).
மாணவப் பருவம் தொட்டே தந்தை பெரியாரின் சுயமரியாதைக் கொள்கை யில் ஈர்ப்புப் பெற்று, அறிஞர் அண்ணா வின் தனி அன்பையும், டாக்டர் நாவலர், டாக்டர் கலைஞர் ஆகியோரிடமும், நம்மைப் போன்ற திராவிடர் இயக்கத் தொண்டர்களிடமும் ஒரு கொள்கைக் குடும்பமாக இறுதிநாள் வரை பழகிய பாசப் பிணைப்புடையவர் அவர்!
எவரைச் சந்தித்தாலும் கைலாகு கொடுத்து அவர்களிடம் கண்ணியத் துடன் உரையாடி, மனதிற்பட்டதை ஒளிவு மறைவு இன்றிப் பளிச்சென்று சொல்லிடும் பழக்கமுடைய, ‘உள் ளொன்று வைத்துப் புறமொன்று’ பேசத் தெரியாத எடுத்துக்காட்டானவர் நம் இனமானப் பேராசிரியர்!
‘‘தமிழனா? திராவிடனா?” என்ற சர்ச்சைக்கு இரண்டு வாக்கியங்களில் முற்றுப்புள்ளி வைத்தவர்! கொள்கைத் தெளிவு நிரம்பிய திராவிடக் கொள்கை யின் தீர்க்கமான விளக்கவுரை புகன்ற வர் பேராசிரியர்!
‘‘‘‘தமிழன்” என்று சொல்லும்பொழுது நான் பெருமை பெறுகிறேன்; ஆனால், ‘‘திராவிடன்” என்று சொல்லும்போது கூடுதலாக சொரணை – ரோஷம் பிறக் கிறது – உரிமையும், உணர்வும் பெறுகி றேன்” என்று ஆணி அடித்ததுபோல் கூறியவர்.
முதலமைச்சர் கலைஞரைத் தலை வராக ஏற்று கடைசிவரை கட்டுப்பாடு காத்த எடுத்துக்காட்டானவர்!
‘திராவிட மாடல்’ ஆட்சியின் ஒப்பற்ற முதலமைச்சராகவும், அதற்கு முன்பே கலைஞருக்குப் பின் தி.மு.க. தலைவராகவும் பொறுப்பேற்ற சமூக நீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்களை முழு மனதுடன் வாழ்த்தி, அவரது தலைமையிலும் பொதுச் செயலாளராகத் தொடர்ந்த அடக்கத்தின் அருட்பா அவர்!
அவரது பிறந்த நாளில், கலைஞர் நூற்றாண்டு விழா காலத்தில் மகிழ்ச்சி யோடு, பேராசிரியரை உயர்த்தி, தனி வளாகம் அமைத்த ஆட்சியின் மாட்சி யர் முதலமைச்சரின் பேருள்ளத்தினை யும் எவரே மறுக்க முடியும்?
வாழ்க பெரியார் வழிவந்த பேராசிரியர்!
ஓங்குக அவர்தம் இனமான கொள்கை உணர்வு!

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை
19.12.2023

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *