சிக்கிம் பனிப்பொழிவில் சிக்கிய 800க்கும் மேலானோர் மீட்பு

viduthalai
1 Min Read

கேங்டாக், டிச. 14- சிக்கிம் மாநில பனிப்பொழிவில் சிக்கிய 800க்கும் அதிகமான பயணிகள் மீட்கப்பட்டு உள்ளனர்.
சிக்கிம் மாநிலத்தின் கிழக்குப் பக்தியில் ஏற்பட்ட பனிப்பொழிவு காரணமாக உயரமான பகுதிகளில் 800-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவித்தனர். நேற்று (13.12.2023) இந்திய ராணு வத்தினர் இவர்களை மீட்டனர்.

இந்தப் பனிப்பொழிவில் பெண்கள், வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் உள்படச் சுற்றுலாப் பயணிகள் பலர் சிக்கித் தவித்தனர். அவர்களை மீட்கும் பணியில் இந்திய ராணுவத்தின் திரிசக்தி கார்ப்ஸ் படையினர் ஈடுபட்டனர்.

நேற்று மாலை வரை இந்த மீட்புப்பணி தொடர்ந்தது மிட் கப்பட்ட சுற்றுலாப் பயணிகள் அனைவரும் பாதுகாப்பான பகுதி களுக்கு மாற்றப்பட்டு அவர் களுக்குத் தங்குமிடம், சூடான ஆடைகள், மருத்துவ உதவி மற்றும் சூடான உணவு ஆகியவை வழங்கப் பட்டன. இந்திய ராணுவ வீரர்கள் மீட்கப்பட்ட சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்காக ராணுவ வீரர்கள் தங்களுடைய முகாம்களை காலி செய்தனர். ராணுவ வீரர்கள் தங்க ளுக்கு அளித்த உடனடி உதவிக்குச் சுற்றுலாப் பயணிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *