76 பழைய சட்டங்களை நீக்கும் மசோதா: நாடாளுமன்றத்தில் நிறைவேறியது

1 Min Read

புதுடில்லி,டிச.14- கடந்த 10 ஆண்டுகளில் மொத்தம் 1,562 சட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரி விக்கப்பட்டுள்ளது.
நடைமுறையில் இல்லாத 76 பழைய சட்டங்களை ரத்து செய்ய கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், ‘ரத்து செய்தல் மற்றும் திருத்தம் செய்தல்’ மசோதா, நாடாளு மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா, கடந்த ஜூலை 27 ஆம் தேதி மக்களவையில் நிறை வேறியது.
இந்நிலையில், நேற்று (13.12.2023) மாநிலங்களவை யிலும் குரல் வாக்கெடுப்பு மூலம் இம்மசோதா நிறை வேற்றப்பட்டது. இதனால் 2 அவைகளின் ஒப்புதலையும் பெற்று விட்டது.
விவாதத்துக்கு பதில் அளித்து பேசிய ஒன்றிய சட்ட அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால், ”மோடி அரசு பதவிக்கு வந்த பிறகு வாழ்க்கையை எளிதாக்கும் வகையில் 1,486 பழைய சட்டங்களை ரத்து செய்தது. தற்போது நீக்கப்படும் 76 பழைய சட்டங்களையும் சேர்த்து, மொத்தம் 1,562 சட்டங்கள் ரத்து செய்யப் பட்டுள்ளன” என்று கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *