தெலுங்கானா முதலமைச்சராக ரேவந்த் ரெட்டி தேர்வு

Viduthalai
1 Min Read
இந்தியா

அய்தராபாத், டிச. 6-  தெலங்கானா மாநிலத்தின் முதலமைச்சராக அம்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ரேவந்த் ரெட்டியை காங்கிரஸ் மேலிடம் தேர்வு செய்துள்ளது.

தெலங்கானா மாநில சட்டப் பேரவைக்கு கடந்த மாதம் 30ஆ-ம் தேதி நடந்த தேர்தலில், 119 தொகு திகளில் காங்கிரஸ் கட்சி 64 தொகு திகளில் வெற்றி பெற்று பெரும் பான்மை பெற்றது. இதையடுத்து, காங்கிரஸ் மாநில கட்சி தலைவர் ரேவந்த் ரெட்டிதான் அடுத்த தெலங்கானா மாநில முதலமைச்சர் என கூறப்பட்டது. ஆனால், காங்கி ரஸில் முதலமைச்சர் பதவிக்கு மூத்த தலைவர்கள் பலர் போட்டியிட்டனர். இதையடுத்து, கருநாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவக் குமாரை காங்கிரஸ் மேலிடம் தெலங் கானாவுக்கு அனுப்பிவைத்தது. அவர், சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் யார் என்பதை முடிவு செய்ய ஒரு கூட்டத்தை நடத்தினார். பின்னர், திங்கட்கிழமை (4.12.2023) இரவு டில்லிக்கு சென்று நடந்த விவரங்களை கட்சி மேலிடத்துக்கு எடுத்துக் கூறினார்.

டில்லியில் ஆலோசனை

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சித்தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில், சோனியா காந்தி, ராகுல்காந்தி, டி.கே சிவக்குமார் உள்ளிட்டோர் ஆலோசனை நடத் தினர். பின்னர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் கேசி. வேணுகோபால் வீட்டிலும் இந்த பிரச்சனை குறித்து நேற்று (5.12.2023) மாலை ஆலோசனை நடத்தப்பட்டது. அதன் பின்னர்,  வேணுகோபால் டில்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தெலங்கானா மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ரேவந்த் ரெட்டியை முதல மைச்சராக அறிவிக்கிறேன். அவர் 7ஆ-ம் தேதி பதவியேற்பார். மற்ற விவ ரங்கள் வெளியிடப்படும். இவ்வாறு வேணுகோபால் கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *