குஜராத் கலவர வழக்கு: குற்றம்சாட்டப்பட்ட 22 பேர் விடுவிப்பாம்

Viduthalai
1 Min Read

கோத்ரா,ஜன.26- குஜராத் மாநிலம் கோத்ராவில் 2002-ஆம் ஆண்டு பிப்ரவரி 27-ஆம் தேதி சபர்மதி எக்ஸ்பிரஸ் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதில் 59 பேர் உயிரிழந்தனர். அதன்பிறகு பெரும் கலவரம் வெடித்தது. பஞ்ச்மஹால் மாவட்டத்தில் திலோல் கிராமத்தில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த 17 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த நிகழ்வு தொடர்பாக 2 ஆண்டுகள் கழித்து முகேஷ் பர்வாத், கில்லோல் ஜானி, அசோக்பாய் படேல், நிரவ்குமார் படேல் உட்பட 22 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் பிணையில் விடுவிக்கப் பட்டனர்.

கடந்த 18 ஆண்டுகளாக இந்த வழக்கு பஞ்ச்மஹால் மாவட்ட ஹலோல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிந்த நிலையில், போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி அவர்கள் 22 பேரையும் நீதிமன்றம் விடுவித்துள்ளது. இவர்களில் 8 பேர் விசாரணைக் காலத்தில் உயிரிழந்து விட்டனர்.

இதுகுறித்து குற்றம் சாட்டப்பட்டவர் களுக்கு ஆதரவாக ஆஜரான வழக் குரைஞர் கோபல் சிங் சோலங்கி கூறுகையில், “குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக போதிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை. உயிரிழந்தவர்களின் உடல்களும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 22 பேரை நீதிபதி விடுவித்துள்ளார்” என்று தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *