புவனேஷ்வர், செப்.19 1999-ஆம் ஆண்டு ஆஸ்தி ரேலிய மிஷனரி கிரஹாம் ஸ்டெய்ன்ஸ் மற்றும் அவரது இரண்டு மகன்களை உயிருடன் கொளுத்திக் கொன்ற வழக்கில் கைதான பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்த தாரா சிங்கின் முன்கூட்டிய விடுதலைக் கோரிக்கை மனுவை ஒடிசா அரசு நிராகரித்துள்ளது.
(செப்டம்பர் 1999): தேவாலயம் ஒன்றுக்கு தீ வைத்த கும்பலை வழிநடத்தியதற்காக தாரா சிங்கிற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. எரியும் கட்டடத்திலிருந்து தப்பிக்க முயன்ற கத்தோலிக்க பாதிரியார் அருள் தாஸ், அம்பு எய்து கொல்லப்பட்டார்.
முஸ்லிம் வியாபாரி ஷேக் ரஹ்மான் படுகொலை: துணி வியாபாரியான ஷேக் ரஹ்மானை அடித்து, தீவைத்து கொன்றதற்காக தாரா சிங்கிற்கு மற்றொரு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. 1999 நவம்பர் 26 அன்று, 20-க்கும் மேற்பட்ட ஆயுதமேந்திய கும்பலுடன் சேர்ந்து ரஹ்மானின் கைகளை வெட்டி, கோடாரியால் தாக்கியுள்ளார். பின்னர் அவரை கடைக்கு இழுத்துச் சென்று மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தினர். உடல் அடையாளங்கள் தெரியாமல் இருக்க உடலும், அவரது கடையும் எரிக்கப்பட்டன. மேற்கு வங்கத்திற்கு மாடுகள் ஏற்றிச் சென்ற லாரிகளை மறித்து, மாடுகளை விடுவித்து லாரிகளுக்கு தீ வைப்பதை தாரா சிங் வழக்க மாகக் கொண்டிருந்தார். இவரின் தாக்குதலுக்கு இலக்கான அனைவரும் முஸ்லிம் லாரி ஓட்டுநர்கள் ஆவர்.
