எப்படி இருக்கிறது ரயில்வே நிர்வாகம்! கோவை ரயில் நிலையக் குடிநீரில் ஆபத்தான கிருமிகள் சிஏஜி தணிக்கையில் அதிர்ச்சித் தகவல்

சிறப்பு புத்தக சலுகைகள்

கோவை, பாலக்காடு, அய்தராபாத் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரில் ‘ஈ-கோலி’ (E-coli) பாக்டீரியா கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவின் முக்கிய ரயில் நிலையங்களில் பயணிகளின் பயன்பாட்டிற்காக வழங்கப்படும் குடிநீரின் தரம் குறித்து மத்திய தணிக்கைக்குழு (சி.ஏ.ஜி.) ஆய்வு மேற்கொண்டது. இதன்படி ரயில் நிலையங்களில் உள்ள குடிநீர் குளிரூட்டிகள், நடைமேடைகளில் உள்ள குடிநீர் குழாய்களில் இருந்து குடிநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

இந்த ஆய்வின் முடிவில், பல்வேறு ரயில் நிலையங்களின் குடிநீரில் பாக்டீரியா இருப்பது அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக கோவை, பாலக்காடு, அய்தராபாத் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரில் வயிற்றுப் போக்கு மற்றும் உணவு நச்சுத்தன்மையை ஏற்படுத்தக் கூடிய ‘ஈ-கோலி’ பாக்டீரியா கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட் டுள்ளது. இது ரயில் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *