புதுடில்லி, ஆக. 9- “மகளிர் இடஒதுக்கீட்டை தொகுதி மறுவரையறையுடன் இணைக்காமல் அமல்படுத்துங்கள்” என்று ஒன்றிய அரசை, ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
பெண்கள் முன்னேற்றம் மற்றும் அவர்களின் பங்களிப்பின் முக்கியத்துவம் குறித்து ராகுல் காந்தி 7.8.2026 அன்று ஒரு காணொலிக் காட்சிப் பதிவு வெளியிட்டிருந்தார். அதில், “இந்திய பெண்களின் ஆற்றல் முடக்கப்பட்டுள்ளது. அது தன்னை வெளிப்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்படுவதில்லை.
கனவு காணவும் அனுமதிக்கப் படுவதில்லை. பெண்கள் தங்களை வெளிப்படுத்திக் கொள்ள முடியாத ஒரு நாடு நிச்சயம் வெற்றி பெற முடியாது” என்று ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.
