ஜாதி, மதமற்றவர் என்ற சான்றிதழ் வழங்க கோரி நடிகர் பார்த்திபன் தொடர்ந்த வழக்கு: அரசு பதிலளிக்க வேண்டும்! உயர்நீதிமன்றம் உத்தரவு

1 Min Read

சென்னை, ஆக.5- நடிகர் பார்த்திபன் தொடர்ந்த பொது நல வழக்கில், தமிழ்நாடு அரசு நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் பார்த்திபன் அண்மையில் ‘ஜாதி மதம் அற்றவர்’ (No Caste, No Religion) என்ற சான்றிதழைப் பெற்றிருந்த நிலையில் பொதுமக்களும் இத்தகைய சான்றிதழ்களை எளிதில் பெறுவதற்கு ஏதுவாக உரிய சட்டம் அல்லது அரசாணை வெளியிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.

தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாமதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள் முருகன் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.

அப்போது, இந்த மனு தொடர்பாக உள்துறை, வருவாய்த்துறை மற்றும் சட்டத்துறை செயலாளர்கள் நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு உத்தர விட்டு விசாரணையை நீதிமன்றம் தள்ளிவைத்தது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *