நாகப்பட்டினம், மே 13- நாகப்பட்டினம் துறைமுகம், இலங்கை காங்கேசேன் துறை இடையே இன்ஜின் பழுது காரணமாக நிறுத்தப்பட்ட பயணிகள் கப்பல் இன்று (13ஆம் தேதி) முதல் மீண்டும் இயக்கப்பட உள்ளது.
நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறை இடையில் தனியார் கப்பல் நிறுவனத்தின் சார்பில் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை இயங்கி வருகிறது.
மூன்று மணி நேரத்திற்கும் மேலான கடல் பயணம் என்பதால் இந்திய இலங்கை சுற்றுலா பயணிகள் இந்த கப்பலை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 8ஆம் தேதி மதியம் 2 மணிக்கு இலங்கை காங்கேசன் துறையில் இருந்து 142 பயணிகளுடன் நாகப்பட்டினம் வந்த கப்பல் கல்லார் கிழக்கே 2 நாட்டிக்கல் மைல் தொலைவில் நடுக்கடலில் இன்ஜின் பழுதடைந்து நடுக்கடலில் நிறுத்தப்பட்டது.
இதை தொடர்ந்து இன்ஜின் பழுது செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதன் பின்னர் நாளை (13ம் தேதி) முதல் வழக்கம் போல் பயணிகள் கப்பல் இயக்கப்படவுள்ளது.
இலங்கைப் பயணிகள் கப்பல் மீண்டும் இயக்கம்
Leave a Comment
