டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* மேகதாது அணை விவகாரமாக கருநாடக முதலமைச்சர் சிவகுமாரை சந்திக்க தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் பயணம், தமிழ்நாடு விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு கடும் எதிர்ப்பு.
* சிஜேபி போராட்டக்காரர்கள் மீது டில்லி காவல்துறை நடவடிக்கை எடுக்காது: மாநில அரசு உத்தரவு.
* நாடாளுமன்றத்திற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா வராதது, அவரது குற்றமுள்ள நெஞ்சே காரணம், ராகுல் காட்டம்.
* இந்திய ஹாக்கி வீரர்களின் உடையில் காவி நிறம் திணிப்பு, எதிர்க்கட்சிகள் கண்டனம்.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* வந்தே மாதரம் கட்டாய மசோதா நிறைவேற்றம்; கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என திமுக கனிமொழி எம்.பி. எதிர்ப்பு.
* வினாத்தாள் கசிவு தடுப்பு திருத்த மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேறியது: வாக்கெடுப்பில் பங்கேற்காமல் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ‘சங் பரிவாரின் செயல்திட்டம்’ என்று விமர்சித்த நிலையில், தற்போது பள்ளிகளில் ‘பிஎம் சிறீ’ (PM SHRI) திட்டத்தைச் செயல்படுத்த காங்கிரஸ் தலைமையிலான கேரளா அரசு ஒப்புதல்
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* தேர்ந்தெடுக்கப்படாத ஒரு அமைச்சரை ஆறு மாதங்களுக்கு மேலாக பதவியில் நீடிக்க வைப்பது எப்படி?: அமைச்சர் தீபக் பிரகாஷ் விவகாரத்தில் பீகார் அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி
* உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பிறகும் 151 சிறப்பு மருத்துவப் படிப்பு (SUPER-SPECIALITY) இடங்களைப் பாதுகாக்க தவறியதாகத் தமிழ்நாடு அரசு மீது மருத்துவர்கள் குற்றச்சாட்டு
தி இந்து:
* தணிக்கை அறிக்கைகளை அணுக ‘பிஎம் கேர்ஸ்’ (PM CARES) மறுப்பது குறித்து ஆர்வலர்கள் கேள்வி.: 2022-2023-க்குப் பிறகு தணிக்கை அறிக்கைகள் பொதுவெளியில் கிடைக்காதது “மிகவும் கவலைக்குரியது” என்று ‘மக்களின் தகவல் உரிமைக்கான தேசிய பிரச்சார’த்தின் (NATIONAL CAMPAIGN FOR PEOPLE’S RIGHT TO INFORMATION) இணை ஒருங்கிணைப்பாளர் அஞ்சலி பரத்வாஜ் கவலை.
* தலைமை நீதிபதி (CJI) இல்லாத தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) தேர்வுக் குழுவை ஒன்றிய அரசு நியாயப்படுத்துகிறது: பிரதமரின் மீதான ‘நம்பிக்கையின்மை’ பற்றியது அல்ல, மாறாக ‘நீதி வழங்கப்படுவது மட்டுமல்லாமல், அது வழங்கப்படுவது வெளிப்படையாகவும் தெரிய வேண்டும்’ என்பது பற்றியது என்று உச்ச நீதிமன்றம் பதிலடி.
தி டெலிகிராப்:
* மாணவர்கள் மீது வன்முறையை பயன்படுத்தும் உத்தரவு அமித்ஷாவிடம் இருந்து வந்ததாக சி.ஜே.பி.-யின் அபிஜீத் டிப்கே குற்றச்சாட்டு; அமித்ஷா பதவி விலக கோரிக்கை
டைம்ஸ் ஆப் இந்தியா:
* ஒரே ஒரு ஆசிரியரை மட்டுமே கொண்டு இயங்கும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள்.!! ஒன்றிய கல்வி அமைச்சகம் அதிர்ச்சித் தகவல். இந்த பட்டியலில் 16,357 பள்ளிகளுடன் ஆந்திரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது
– குடந்தை கருணா
