100-அய் நெருங்கும்
அசாம் வெள்ள உயிரிழப்பு
வடகிழக்கு மாநிலங்களில் ஒன் றான அசாமில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 66ஆக அதிகரித்துள்ளது. பலர் காணாமல் போயுள் ளதால், அசாம் வெள்ள உயிரிழப்பு எண் ணிக்கை 100-அய் தாண்டலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன.
அசாம் கனமழை வெள்ளம் தொடர் பாக அம்மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் நேற்று (26.7.2026) வெளியிட்ட அறிக்கையில், ‘‘அசாம் மாநிலத்தில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சிவசாகர் மாவட்டத்தில் 4 பேரும், சராய்தியோ மாவட்டத்தில் ஒருவரும் பலியானதைத் தொடர்ந்து மொத்த உயிரிழப்பு 66ஆக உயர்ந்துள்ளது. சிவ சாகர், சராய்தியோ, ஜோர்காட் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் 6.54 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 810 கிரா மங்கள் நீரில் மூழ்கி 34,970.8 ஹெக்டேர் விவசாய நிலங்கள் சேதமடைந்துள்ளன என அதில் கூறப்பட்டுள்ளது.
