மண்ணச்சநல்லூரில் இயங்கி வரும் சமூகநல மாணவர் விடுதிக்கு தந்தை பெரியார் படம் வழங்கல்

1 Min Read

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் இயங்கி வரும் தமிழ்நாடு அரசின் சமூகநல மாணவர் விடுதியில் தந்தை பெரியார் படம் வைப்பதற்காக, அரியலூர் மாவட்ட கழக இளைஞரணி துணைச் செயலாளர் மறவனூர் மதியழகன் விடுதிக் காப்பாளரிடம் வழங்கினார். மேலும் தந்தை பெரியார் வாழ்க்கை வரலாறு குறித்த புத்தகமும் வழங்கி விடுதிக் காப்பாளருக்கு பயனாடை போர்த்தி சிறப்பு செய்தார். இந்நிகழ்வில் மண்ணச்சநல்லூர் ஒன்றிய கழகத் தலைவர் கு.பொ. பெரியசாமி, நகர கழகச் செயலாளர் க. பாலச் சந்திரன், பொதுக்குழு உறுப்பினர் மூ.முத்துசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

திராவிடர் கழகம்

ஆவடி மாவட்டம் திருமுல்லைவாயல் பகுதி கழகச் செயலாளர் மு.ரவீந்திரன் கடந்த 25.5.2026 அன்று தருமபுரியில் சாலை விபத்தில் சிக்கி தருமபுரி விஜயா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தகவல் அறிந்ததும் ஆவடி மாவட்ட கழகத் தலைவர் வெ.கார்வேந்தன் தலைமையில் செயலாளர் க.இளவரசன்,துணைச்செயலாளர் க.தமிழ்ச்செல்வன், ஆவடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் க.கார்த்திக்கேயன், வை.கலையரசன் ஆகியோர் நேற்று (26.06.2026) அதிகாலை 3 மணிக்கு மருத்துவமனைக்குச் சென்று உடல்நிலை குறித்து விசாரித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *