
வடக்குத்து, ஜூன் 19- வடக்குத்து அண்ணா கிராமம் பெரியார் படிப்பகம் மாதாந்திர சிறப்பு கூட்டம் 15.6.2026 அன்று மாலை 6 மணி முதல் 8 45 மணி வரை பொற்கால ஆட்சி தந்த கலைஞர் 103 எனும் சிறப்பு கூட்டம் கிளைக் கழக தலைவர் தங்க பாஸ்கர் தலைமையில் மாவட்ட தலைவர் தண்டபாணி, பொதுக்குழு உறுப்பினர் தாமோதரன், மாவட்டத் துணைத் தலைவர் மணிவேல், நூலகர் கண்ணன், மாவட்ட இளைஞரணி செயலாளர் டிஜிட்டல் ராமநாதன், மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் இரா. பெரியார்செல்வம், பெரியார் வீர விளை யாட்டு கழக மாவட்ட தலைவர் மாணிக்கவேல், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் முனியம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஒன்றிய கழக தலைவர் கனகராஜ் வரவேற்புரை ஆற்றினார். கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திர சேகரன் கலைஞரின் பொற்கால ஆட்சி எனும் தலைப்பில் அவரின் சாதனைகளை மக்கள் நலத் திட்டங்களைச் சட்டங்களை விளக்கி ஒரு மணி நேரத்திற்கு மேல் சிறப்புரையாற்றினார்.
நிகழ்வில் முத்துராஜ் தங்கசாமி சேகர் பாவேந்தர் விரும்பி தமிழ்மணி திராவிட மணி மருவாய் திருநாவுக்கரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.
தலைவர் கலைஞரின் படத்திற்கு கழகப் பொதுச் செயலாளர் மாலை அணிவித்தார்.
