தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை 18.3.2023 அன்று தலைமைச் செயலகத்தில், அகில இந்திய பார் கவுன்சில் துணைத் தலைவர் எஸ்.பிரபாகரன், தமிழ்நாடு – புதுச்சேரி வழகுரைஞர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் என்.மாரப்பன், துணைத் தலைவர் பிரிசில்லா பாண்டியன், பொதுச் செயலாளர் பி.காமராஜ், பொருளாளர் கே.முரளிபாபு, தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், கவுரவ செயலாளர் ஆர்.அப்பாவு மற்றும் நிர்வாகிகள் சந்தித்து, வழக்குரைஞர்கள் சேம நல நிதியை 7 இலட்சம் ரூபாயிலிருந்து 10 லட்சம் ரூபாயாக உயர்த்தியதற்காகவும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலிற்கு ரூ.20 கோடியை மூலதன வைப்பு தொகையாக அளித்தமைக்காகவும், சென்னையில் நீதிமன்ற கட்டடங்களை அமைக்க 7 ஏக்கர் நிலம் நிதி ஒதுக்கீடு செய்தமைக்காகவும் நன்றி தெரிவித்தனர். உடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பி.வில்சன், என்-ஆர்.இளங்கோ, அரசு தலைமை வழக்குரைஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆகியோர் உள்ளனர்.
தமிழ்நாடு – புதுச்சேரி வழகுரைஞர் சங்கங்களின் கூட்டமைப்பு – நன்றி
1 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books