உலக சுற்றுச்சூழல் நாளினை முன்னிட்டு பெரியார் மருந்தியல் கல்லூரியில் மரக்கன்று நடும் விழா!

1 Min Read

திருச்சி, ஜூன் 8- உலக சுற்றுச்சூழல் நாளான 05.06.2026 அன்று பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர்
இரா.செந்தாமரை தலைமையில் கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

முன்னதாக மருந்தியல் பட்டயப் படிப்பு மாணவர்கள் பெரியார் மருந்தியல் கல்லூரி வளாகத்தின் பசுமையை பேணிக் காக்கும் விதமாக தூய்மைப் பணியினை மேற்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. செந் தாமரை, இளநிலை மருந்தியல் பட்டப் படிப்பு துறை முதன்மையர் முனைவர் சு. கற்பகம் குமர சுந்தரி, மூலிகை மருந்தியல் துறைத் தலைவர் முனைவர் ஷகிலா பானு, பேரா. முனைவர் விஜயலெட்சுமி, பேரா. ஜெசிமா பேகம் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் பேரா. தினேஷ் ஆகியோர் வளாகத்தின் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் விதமாக மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *