பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!

1 Min Read

சென்னை, ஜூன் 3- பொறியியல் படிப்புக்கு இணைய வழியில் விண்ணப்பிக்கும் அவகாசம் ஜூன் 5ஆம் தேதி வரை நீட்டிக்கப் பட்டுள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக் கழக துறைக் கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் என தமிழ்நாட்டில் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகளில் சுமார் 1.70 லட்சம் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன. இவை பொதுக் கலந்தாய்வு மூலம் ஒற்றைச் சாளர முறையில் நிரப்பப்படுகின்றன.

அந்த வகையில், வரும் 2026-2027ஆம் கல்வி ஆண்டில் அரசு ஒதுக்கீட்டு பொறியியல் இடங்களில் சேருவதற்கான இணைய வழியில் விண்ணப்ப பதிவு கடந்த மே 3ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. நேற்று (1.6.2026) மாலை நிலவரப்படி 2.87 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.

விண்ணப்ப அவகாசம் இன்றுடன் (ஜூன் 2) முடிவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலை யில், மாணவர்கள் நலன் கருதி, அவகாசம் ஜூன் 5ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

எனவே, பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் https://www.tneaonline.org என்ற இணைய தளம் வாயிலாக 5ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். சான்றிதழ்களை 6ஆம் தேதி வரை பதிவேற்றம் செய்யலாம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *