சென்னை, மே 25 தமிழ்நாடு முழு வதும் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரி வாயு உருளைகளுக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், சிறிய உணவகங்கள் மற்றும் தேநீர்க் கடைகள் பெரும் இழப்பீட்டைச் சந்தித்து, மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
கடந்த ஒரு மாதத்திற்குள், 19 கிலோ எடையுள்ள வணிகப் பயன்பாட்டு எரிவாயு உருளையின் விலை வரலாறு காணாத வகையில் ரூ.1,000 வரை உயர்ந்து, தற்போது ரூ.3,450-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இது ஒருபுறமிருக்க, போதிய அளவு எரிவாயு உருளைகள் சந்தையில் கிடைக்காததால் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால், சிறிய மற்றும் நடுத்தர உணவகங்கள், பேக்கரிகள் மற்றும் தேநீர் கடை உரிமையாளர்கள் வேறு வழியின்றி, வெளிச்சந்தையில் கூடுதல் பணம் கொடுத்து எரிவாயு உருளைகளை வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர்.
மூலப்பொருட்களின் விலை ஏற்றம் மற்றும் எரிவாயு உருளைகள் தட்டுப்பாடு காரணமாக தேநீர், காபி மற்றும் உணவுப் பொருட்களின் விலையை உயர்த்த வேண்டிய நிலைக்கு வியாபாரிகள் தள்ளப்பட்டு உள்ளனர். எரிவாயு உருளைகள் கிடைக்காததால் மின்சார அடுப்பு களைப் பயன்படுத்தும் கடைகளில் மின்கட்டணம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதனால், வேறு வழியின்றி பல சிறு வணிகர்கள் மீண்டும் பழையபடி விறகு அடுப்பு களைப் பயன்படுத்தும் நிலைக்குப் பின்னோக்கிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து கவலை தெரி வித்துள்ள தேநீர் கடை உரிமை யாளர்கள், ‘‘எங்களின் அன்றாட வாழ்வாதாரமே இந்த எரிவாயு உருளைகளை நம்பித்தான் உள்ளது. இந்தக் கடுமையான தட்டுப்பாட்டுச் சூழலில், அரசு உடனடியாக தலையிட்டு எங்க ளுக்குத் தட்டுப்பாடின்றியும், நியா யமான விலையிலும் எரிவாயு உருளைகள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இப்பிரச்சினைக்கு அரசு விரைந்து தீர்வு காணாவிட்டால், ஆயிரக்கணக்கான சிறு கடைகள் நிரந்தரமாக மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
