மலேசியா, ஏப். 28– மலேசியா தாப்பா நகரில் அண்மையில் காலமான முதுபெரும் பெரியார் தொண்டர் கெ. வாசு அவர்களின் இரங்கல் கூட்டம் 25.4.32026இல் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் சிலாங்கூர் மற்றும் பேரா மாநிலத்தைச் சார்ந்த பெரியார் தொண்டர்கள் மற்றும் அவரின் உறவினர்கள் நூற்றுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டார்கள். தா.சி, முனியரசன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்திற்கு பெரியார் பாசறையின் தலைவர் மு.மணிமாறன் முன்னிலை வகித்தார்.
தோழர்கள் மா.இலட்சுமணன், விந்தை குமரன், முனைவர் மு கோவிந்தசாமி, பன்னீர்செல்வம், அறிவின் மற்றும் பல பெரியார் சிந்தனையாளர்கள் உறவினர்கள் நினைவில் வாழும் வாசு அவர்களைப் பற்றி அவரின் 50 ஆண்டுகால திராவிட இயக்க பணிகளைப் பற்றி எடுத்துரைத்தார்கள். அவர் விட்டுச் சென்ற பெரியார் பாசறை யின் பணிகளை தொடர்ந்து சிறப்பாக செய்திட வேண்டும் என்று செயற்குழுவினர் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள்.

