‘‘முத்தமிழறிஞர் கலைஞர்’’ வழியில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு உள் இடஒதுக்கீடு அறிவித்த சித்தராமையா!

3 Min Read

பெங்களூரு, ஏப்.28 தமிழ்நாட்டில் 2009 ஆம் ஆண்டு முதலமைச்சர் கலைஞர் தமது வரலாற்று சாதனைகளில் மணி மகுடமாக ‘அருந்ததியர்’ உள் இட ஒதுக்கீட்டை வழங்கினார்.
2009 ஆம் ஆண்டு முதலமைச்சராக கலைஞர் இருந்த போது உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அருந்ததியினருக்கு 3 சதவிகிதம் இட ஒதுக்கீடு சட்ட மசோதா தாக்கல் செய்து சட்டம் இயற்றப்பட்டது.

இந்தச் சட்டத்தை எதிர்த்தும் வழக்கு தொடரப்பட்டது. 2020 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு சட்டம் செல்லுபடியாகும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஆனால், ஏற்கெனவே உள் ஒதுக்கீட்டை அனுமதிக்கக்கூடாது என்று ஆந்திர மாநில வழக்கில் 2004 ஆம் ஆண்டு உச்சநீதி மன்றத்தின் 5 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு வழங்கியிருந்தது. இதன் காரணமாக இந்த வழக்கை 7 நீதிபதிகள் அமர்வுக்கு உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்திருந்தது.

இந்த வழக்கில் தலைமை நீதிபதியாக இருந்த சந்திரசூட் தலைமையிலான 7 நீதிபதிகள் அமர்வு 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் ஒன்றாம் தேதியன்று இறுதித் தீர்ப்பு வழங்கியது. எஸ்சி/எஸ்டி – பட்டியலின பழங்குடினருக்கான உள்ஒதுக்கீட்டை மாநில அரசுகள் வழங்க முடியும் அன்று அருந்ததியர் உள்ஒதுக்கீடு தொடர்பான தமிழ்நாடு அரசின் சட்டம் செல்லும் என்று 6 நீதிபதி கள் ஒருமித்த தீர்ப்பு வழங்கினர்.

இதனைப் பின்பற்றி தற்போது கரு நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசும் தாழ்த்தப்பட்டவர்களுக்கான எஸ்சி-எஸ்டி பிரிவினருக்கான உள் இட ஒதுக்கீட்டை அறிவித்துள்ளது.
கருநாடகாவில் பட்டியல் ஜாதிகள் இடது கை, வலது கை, தீண்டத்தகாத பிரிவு என பிரிக்கப்பட்டுள்ளன. இருந்த போதும் சில சமூகங்களே இடஒதுக்கீட்டின் பலனை அனுப விக்கின்றன என்கிற சர்ச்சை வெடித்த நிலையில் எஸ்சி/எஸ்டி இடஒதுக்கீடு தொடர்பாக ஆய்வு செய்ய குழுக்கள் அமைக்கப்பட்டன.

இதில் ஏஜே சதாசிவா ஆணைய மானது, எஸ்சி/எஸ்டி- பட்டியல் ஜாதியி னருக்கான 15% இடஒதுக்கீட்டை 6:5:3:1 என்ற விகிதத்தில் பிரிக்கப் பரிந்துரைத்தது.
ஆனால், 2023 இல் ஆட்சியில் இருந்த பாஜக அரசு, எஸ்சி/எஸ்டி இட ஒதுக்கீட்டை 15 சதவீதத்தில் இருந்து 17 சதவீதமாக உயர்த்தியது. அத்துடன் 6 சதவிகிதம் (இடது), 5.5 சதவிகிதம் (வலது), 4.5 சதவிகிதம் (தீண்டத்த காத ஜாதியினர்) மற்றும் ஒரு சதவிகிதம் (மற்றவர்கள்) எனப் பிரித்து உள் இட ஒதுக்கீடு அறிவித்தது.
தமிழ்நாட்டைத் தவிர பிற மாநிலங்க ளில் இடஒதுக்கீடு 50 சதவிகிதத்திற்கு அதிகமாக இருக்கக் கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறியதாக கருநாடகா பாஜக அரசின் நடவடிக்கை இருந்ததால் நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டது.

இதனையடுத்து நீதிபதி நாகமோகன் தாஸ் ஆணையம் கடந்த ஆண்டு அமைக்கப்பட்டது.

தற்போதைய காங்கிரஸ் அரசு அமைத்த இந்த ஆணையம், விரிவான ஆய்வுகளை நடத்தி 1-6-5-4-1என்ற பார்முலாவைப் பரிந்துரைத்தது.
அதாவது எஸ்சி/எஸ்டி சமூகங்களை 5 பிரிவுகளாகப் பிரித்து அவர்களுக்கான உள் இடஒதுக்கீடாக 1-6-5-4-1 பார்முலா முன்வைக்கப்பட்டது. ஆனால் இது 17 சதவிகித இட ஒதுக்கீட்டின் அடிப்படை யிலானது. இதனை செயல்படுத்தினாலும் நீதிமன்றம் தடை விதிக்கும்.

இந்த நிலையில்தான் கருநாடகாவில் முதலமைச்சர் சித்தராமையா தலை மையிலான காங்கிரஸ் அரசு எஸ்சி/எஸ்டி பட்டியலில் உள்ள 3 பிரிவினருக்கு 5.25- 5.25- 4.50 என இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்தது. இதற்கு அம்மாநில அரசின் அமைச்சரவையும் ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்படி எஸ்சி/எஸ்டி பட்டியலில் உள்ள
Group A: மாதிகா உள்ளிட்ட 15 ஜாதியி னருக்கு 5.25 சதவிகிதம்
Group B: 18 ஜாதியினருக்கு 5.25 சத விகிதம்
Group C: லம்பானி, போவி உள்ளிட்ட 59 மிகவும் பின் தங்கிய பிரிவினருக்கு 4.50 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கப்ப டும்.
அதே நேரத்தில் இந்த உள் இட ஒதுக்கீடு முறை குறித்தும் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *