சென்னை, ஏப்.11- சென்னையின் 10.4.2026 அன்று மெட்ரோ ரயிலில் பயணித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இது தொடர்பாக அவர் தனது சமூகவலைதளத்தில் பகிர்ந்த பதிவில், “மெட்ரோ விரிவாக்கப் பணிகள் எல்லாம் நிறைவுறும்போது, இந்தியாவிலேயே மெட்ரோ வழியாக அதிக தூரத்தை இணைக்கும் நகரங்களுள் ஒன்றாகச் சென்னை விளங்கும்,” என்று பெருமிதம் தெரிவித்தார்.
முதலமைச்சர் தனது சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:
மக்களின் அன்பில் நனைந்தபடியும், மெட்ரோ இரயில் திட்டம் உருவாகப் பாடுபட்ட நாட்களின் நினைவுகளைச் சுமந்தபடியும் ஒரு பயணம்… துணை முதலமைச்சராக இருந்தபோது, ஜப்பான் நாட்டிற்குச் சென்று JICA-வின் நிதியுதவியைப் பெற்று வந்து, நான் முன்னின்று செய்த திட்டம்!
விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரையிலும், சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரையிலும் இயங்கிவரும் முதற்கட்டத் திட்டத்தில் இதுவரையில் கோடிக்கணக்கான பயணங்களை மக்கள் மேற்கொண்டுள்ளனர்.
அதிவேகமாக நடைபெற்றுவரும் மாதவரம் – சிறுசேரி, கலங்கரை விளக்கம் – பூவிருந்தவல்லி, மாதவரம் – சோழிங்கநல்லூர் இடையேயான இரண்டாம் கட்டத் திட்டப் பணி களையும் விரைவில் மக்களின் பயன் பாட்டுக்கு ஒப்படைப்போம்.
விமான நிலையம் – கிளாம்பாக்கம், கோயம்பேடு – பட்டாபிராம், பூவிருந்த வல்லி – சுங்குவார்சத்திரம், தாம்பரம் – கிண்டி, கலங்கரை விளக்கம் – உயர் நீதிமன்றம், சிறுசேரி – கலைஞர் பன்னாட்டு அரங்கம் என மெட்ரோ விரிவாக்கப் பணிகளெல்லாம் நிறைவுறும் போது, இந்தியாவிலேயே மெட்ரோ வழியாக அதிக தூரத்தை இணைக்கும் நகரங்களுள் ஒன்றாகச் சென்னை விளங்கும்!
சென்னையை வளர்த்தெடுக்கும் நமது கனவு வெல்லட்டும்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

