வாசிங்டன், மார்ச் 8 ஈரானுடன் இனி எந்த பேச்சுவார்த்தையும் கிடையாது, அந்நாடு நிபந்தனையற்ற முறையில் சரணடைவது ஒன்றே போரை நிறுத்த ஒரே வழி என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா – ஈரான் போர் எதிரொலியாக பெட்ரோல், டீசல் விலை கிடுகிடு உயர்ந்து வருவதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக ஈரானும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவு தளங்கள் மற்றும் இஸ்ரேல் நாட்டு நகரங்களை தாக்கி வருகிறது. இது உலக நாடுகள் இடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, ஈரானுடன் இனி எந்த பேச்சுவார்த்தையும் கிடையாது, அந்நாடு நிபந்தனையற்ற முறையில் சரணடைவது ஒன்றே போரை நிறுத்த ஒரே வழி என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அமெரிக்கா – ஈரான் போரால் கச்சா எண்ணெய் விலை 2 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஒரு பீப்பாய்க்கு 9 விழுக்காடு விலை உயர்ந்து 93 அமெரிக்க டாலரானது.
மேலும் 20 சதவீத கச்சா எண்ணெய் போக்குவரத்து நடைபெறும் ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியதால் பிரிட்டன், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
வளைகுடா நாடுகளில் இருந்து
52,360 இந்தியர்கள் இந்தியா திரும்பினர்
மும்பை, மார்ச்.8 மேற்கு ஆசியாவிலும் வளைகுடா நாடுகளிலும் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, அங்கு சிக்கித் தவித்த இந்தியர்களை மீட்கும் பணியை ஒன்றிய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 52,360 இந்தியர்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்பியுள்ளனர்.
ஒன்றிய சிவில் விமானப் போக்குவரத்து இயக்ககம் (DGCA) மற்றும் வெளியுறவு அமைச்சகம் (MEA) இணைந்து இந்த மீட்புப் பணிகளை ஒருங்கிணைத்து வருகின்றன. போர் பதற்றம் காரணமாக சில பகுதிகளில் வான்வெளி மூடப்பட்டுள்ள நிலையிலும், பகுதி அளவிலான விமானச் சேவைகள் மூலம் மக்கள் மீட்கப்பட்டு வருகின்றன.
