சென்னை, மார்ச்.1 மதுரையில் நடைபெறவுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக்கூட்ட மேடை நுழைவாயிலில் இருந்து தந்தை பெரியாரின் படம் அகற்றப்பட்ட விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் கண்டனத்தை ஏற்படுத்தி யுள்ளது. இந்த விவகாரம் குறித்து தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப் பினருமான கனிமொழி தனது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கனிமொழி, அ.தி.மு.க.வின் தற்போதைய நிலையை மிகக் கடுமையாக விமர் சித்தார். அவரது உரையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
“அ.தி.மு.க. இன்று ஒரு சுதந் திரமான கட்சியாக இயங்கவில்லை’’ என்று குறிப்பிட்ட கனிமொழி, “அ.தி.மு.க. இன்று அடகு வைக்கப் பட்ட நிலையில் உள்ளது. எனவே, முதலாளி (பா.ஜ.க.) எதைச் சொல்கிறாரோ, அதைத் தொழி லாளி (அ.தி.மு.க.) செய்கிறார். தந்தை பெரியார் படத்தை மட்டுமல்ல, அண்ணா மற்றும் ஜெய லலிதாவின் படங்களையே அகற்றச் சொன்னாலும் அவர்கள் தயங்காமல் செய்வார்கள்,” என்று சாடினார்.
பெரியாரைப் புரிந்து கொள்ளாதவர்களுக்கு இடமில்லை
பெரியாரின் கொள்கைகள் பா.ஜ.க. போன்ற கட்சிகளுக்கு ஒத்து வராது என்பதைச் சுட்டிக்காட்டிய அவர்:”அவர்கள் இருக்கும் இடத்தில் பெரியார் இருக்க மாட்டார், இருக்க வேண்டிய அவசியமும் இல்லை’’ பெரியாரைப் புரிந்து கொள் ளாதவர்களுக்கு தமிழ்நாட்டில் இடமும் இல்லை, வேலையும் இல்லை. “பெரியாரை மறுப்பவர்கள் தமிழ் மக்களால் நிச்சயமாக மறுக்கப் படுவார்கள்.”
பெண்களின் முன்னேற்றமும் திராவிட மாடலும்
தமிழ்நாட்டுப் பெண்களின் முன்னேற்றத்திற்குப் பெரியாரே அடிப்படைக் காரணம் என்று குறிப் பிட்ட அவர், “இன்று தமிழ்நாட்டில் 42 சதவீத பெண்கள் உழைக்கும் சக்தியாக இருக்கிறார்கள் என்றால், அதற்குப் பெரியார் போட்ட விதைதான் காரணம். அந்த வழியில் வந்த அண்ணா, கலைஞர் மற்றும் தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் திராவிட மாடல் ஆட்சியை முன்னெடுத்துச் செல்கின்றனர்,” என்று பெருமிதத் துடன் தெரிவித்தார்.
