புதுடில்லி, ஜன.17- சட்டவிரோதமாகச் செயல்பட்ட 242 இணையதளங்களை ஒன்றிய அரசு நேற்று (ஜன. 16) தடை செய்துள்ளது.
இணைய விளையாட்டுச் சட்டத் தின்கீழ், ஒன்றிய அரசு இந்த நடவடிக் கையை எடுத்துள்ளதாக ஒன்றிய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. சட்டவிரோதச் சூதாட்டத்தில் ஈடுபடும் பயனர்கள், அதிலும் குறிப்பாக இளையோர், தங்கள் பணத்தை இழப்பதை தடுப்பதில் அரசு தீவிரமாக இருப்பதை இன்றைய நடவடிக்கை பிரதி பலிப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
கடந்தாண்டு ஆகஸ்ட்டில் நாடாளு மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் விளையாட்டுச் சட்டம் அமலான பின், இதுவரை 7800க்கும் மேற்பட்ட சட்டவிரோத சூதாட்ட இணையதளங்கள் முடக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
