டேன்ஜெட்கோவில் 10,260 பணியிடங்கள் நிரப்புதல் டிஎன்பிஎஸ்சி மூலம் தமிழ்நாடு அரசு ஏற்பாடு

Viduthalai
1 Min Read

அரசு, தமிழ்நாடு

சென்னை, ஏப். 24- தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் (டேன்ஜெட்கோ) முதல்கட்டமாக 200 தொழில் நுட்ப உதவியாளர் காலிப்பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பத் தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.

இது தொடர்பாக எரிசக்தித் துறைச் செயலர் ரமேஷ் சந்த் மீனா பிறப்பித்த உத்தரவு:

கடந்த ஆண்டு மார்ச் 30ஆம் தேதிநிதித்துறை பிறப்பித்த உத்தர வில், “நட்டத்தில் இயங்கும் அரசு நிறுவனங்கள், நேரடி நியமனம் மூலம் 25-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்பும்போது அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும்” எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் 107ஆவது வாரிய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, மின்னியல் பிரிவில் 400 உதவிப் பொறியாளர்கள், 600 தொழில் நுட்ப உதவியாளர்கள், மெக்கா னிக்கல் பிரிவில் 50 உதவிப் பொறி யாளர்கள், கணக்குப் பிரிவில் 300 இளநிலை உதவியாளர்கள், சிவில் பிரிவில் 60 உதவிப் பொறியாளர் கள், 850 மின் கணக்கீட்டாளர்கள், 8 ஆயிரம் கள உதவியாளர்கள் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் உள்ள 10,260 காலிப்பணியிடங் களை நிரப்ப கழகத்தின் மேலாண் இயக்குநர் அரசிடம் அனுமதி கோரியுள்ளார்.

இதை உயர் நீதிமன்ற உத்தர வின்படி கவனமாகப் பரிசீலித்த அரசு 10,260 காலிப்பணியிடங் களில் முதல்கட்டமாக மின்னியல் பிரிவில் 200 தொழில்நுட்ப உதவியாளர் பணிகளில் ஆட்களை நியமிக்க 2 நிபந்தனைகளுடன் ஒப்புதல் அளிக்கிறது. அதன்படி, இந்த காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகளை மேற் கொள்ள தமிழ்நாடு அரசுப் பணி யாளர் தேர்வாணையத்தை டேன் ஜெட்கோ அணுக வேண்டும். 

மேலும், மனிதவள கொள் கையை வெகு விரைவில் வகுப்ப தோடு ஓய்வூதியத்துக்கான நிதி யத்தை ஏற்படுத்த வேண்டும். மனிதவளத்தை முறைப்படுத்து வதற்கான நடவடிக்கையும் மேற் கொள்ள வேண்டும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *