ஜனவரி 5இல் 10 லட்சம் மடிக்கணினிகள் கல்லூரி மாணவர்களுக்கான மெகா திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, டிச. 28– தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் வகையில், வரும் ஜனவரி 5-ஆம் தேதி முதல் மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைக்க உள்ளார். சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட விழாவில், முதலமைச்சர் இந்தத் திட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கிறார். இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் சுமார் 10 லட்சம் மாணவர்கள் பயன்பெற உள்ளனர்.

டிஜிட்டல் சமத்துவம்: பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் கிராமப்புற மாணவர்களுக்குத் தொழில்நுட்பக் கல்வியை எளிதாகக் கொண்டு சேர்த்தல்.

கல்வி மற்றும் ஆராய்ச்சி: இணைய வழி வகுப்புகள், கல்வி சார்ந்த ஆய்வுகள் மற்றும் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராக மாணவர்களுக்குத் துணைபுரிதல்.

திறன் மேம்பாடு: நவீன தொழில் நுட்ப அறிவைப் பெறுவதன் மூலம், வருங்கால வேலைவாய்ப்புகளுக்கு மாணவர்களைத் தகுதியுள்ளவர் களாக மாற்றுதல். “கல்வி என்பது அனைவருக்கும் சமமாகச் சென்றடைய வேண்டும்” என்ற தமிழ்நாடு அரசின் உன்னத நோக்கத்தை உறுதிப்படுத்தும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. குறிப்பாக, மாணவர்கள் ஆராய்ச்சிப் பணிகளில் சிறந்து விளங்கவும், தங்களின் டிஜிட்டல் திறன்களை (Digital Skills) வளர்த்துக்கொள்ளவும் இந்த மடிக்கணினிகள் பெரும் உதவியாக இருக்கும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக மாணவர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த இந்த மடிக்கணினி வழங்கும் திட்டம், தற்போது செயல்பாட்டுக்கு வருவது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *