பிஜேபி ஆளும் மகாராட்டிரத்தில் விவசாயி வாங்கிய கடனுக்காக விவசாயியின் சிறுநீரகத்தை எடுத்த கொடூரம்! கந்து வட்டிக்கார்கள் கும்பல் கைது

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

மும்பை, டிச.19 மகாராட்டிர மாநிலம் சந்திரபூரைச் சேர்ந்த விவசாயி ரோஷன் குடே (29). இவருக்குச் சுமார் 4 ஏக்கர் நிலம் உள்ளது. விவசாயத்தில் தொடர்ந்து இழப்பு ஏற்பட்டதால், பால் பண்ணை வைக்க மாடுகளை வாங்கியுள்ளார். இதற்காக, உள்ளூர் கந்து வட்டிக்காரர்களிடம் கடந்த 2021-ஆம் ஆண்டு ரூ.50,000 கடன் வாங்கியுள்ளார்.

அதற்கு வட்டியாக மட்டும் இதுவரை ரூ. 7.5 லட்சம் வரை கொடுத்து வந்துள்ளார். எனினும், கடன் இன்னும் முடியவில்லை எனக் கூறி கந்து வட்டிக்காரர்கள் அவரை மிரட்டியுள்ளனர். மேலும், ஒரு சிறுநீரகத்தை விற்று கடனை அடைத்து விடும்படி கந்து வட்டிக் காரர்களே யோசனை கூறியுள்ளனர். வேறு வழியின்றி அவரும் தனது சிறுநீரகத்தை விற்று விட்டார்.

இதனால் மன உளைச் சலுக்கு ஆளான ரோஷன், சந்திரபூரின் பிரம்மபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து கந்து வட்டிக்காரர்கள் 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், மனித உறுப்பு கடத்தல் மற்றும் சட்டவிரோத கடன் வசூல் ஆகிய கோணங் களில் விசாரித்து வருகின்றனர்.

முன்னதாக, சிறு நீரகத்தை விற்க இணைய தளத்தில் ரோஷன் தகவல் தேடியுள்ளார். அதன் மூலம் முகவர் ஒருவர் தொடர்பு கொண்டு, ரோஷனை கொல் கத்தாவுக்கு அழைத் துச் சென்றுள்ளார். அங்கு மருத்துவப் பரிசோத னைகள் முடிந்த பின்னர், அவரை கம்போடியாவுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அங்கு ரோஷனின் சிறுநீரகம் அகற்றப்பட்ட பிறகு, அவருக்கு ரூ. 8 லட்சம் வழங்கப்பட்டுள் ளது. இந்த வழக்கில் சந் திரபூரின் கந்து வட்டிக் காரர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள் ளன. இதேபோல், மகா ராஷ்டிராவில் வேறு விவசாயிகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்றும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வரு கின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *