* மருத்துவரின் ஆலோசனையைப் பெற விரும்பினால் முதலில் மருத்துவருக்கோ அல்லது மருத்துவமனைக்கோ சென்று உங்கள் வருகையைப் பதிவு செய்து கொள்ளுங்கள்.
* குறித்த நாளில் போக முடியவில்லை என்றால் உங்களால் செல்ல முடியாத நிலையைத் தெரிவிக்க வேண்டும்.
* உங்களின் தொல்லைகளைச் சிறு குறிப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும். எடுத்துக் காட்டாக: மலச்சிக்கல், தூக்கமின்மை, மூட்டுவலி, பசியின்மை போன்றவை.
* மருத்துவருடன் அவசியமற்ற உரையாடல்கள் – பேச்சுகளைத் தவிர்க்க வேண்டும்.
* கடந்த முறை மருத்துவர் கொடுத்த மருந்துச் சீட்டை மறக்காமல் உடன் எடுத்துச் செல்லுங்கள்.
* அண்மையில் செய்த மருத்துவ ஆய்வுகளைப் பற்றிய விவரங்களையும் மறக்காமல் கொண்டு செல்வது அவசியம்.
தேவையின் பொருட்டு நீங்கள் அன்றாடம் உட்கொள்ளும் மருந்துகளையும் எடுத்துச் செல்லுங்கள்.
* உங்களுக்கு ஏதேனும் ஒவ்வாமை (அலர்ஜி) இருக்கும் பட்சத்தில் மருத்துவர் மருந்துச் சீட்டை எழுதுவதற்கு முன்னரே தெரிவித்து விடுங்கள்.
* மருத்துவரின் ஆலோசனையின்றி ஆர்வமிகுதியால் எந்தப் பரிசோதனைகளையும் செய்யக் கூடாது.
* பழைய சிகிச்சை முறைகளைப் பற்றியும், குறிப்பிட்ட அறுவை சிகிச்சை பற்றியும் மருத்துவர் கேட்டால் மட்டும் தெரிவிக்கவும்.
* மருத்துவரின் அறைக்குள் உங்களோடு ஒருவர் அல்லது இருவரை மட்டும் அழைத்துச் செல்லுங்கள்.
* கைப்பேசியை அமைதி நிலையில் (Silent Mode) வைத்துக் கொள்ளுங்கள்.
* மருத்துவர் தீவிரமாக உங்களைப் பரிசோதித்து கொண்டிருக்கும்போது மற்றவர்கள் தேவையில்லாமல் குடும்ப நிகழ்வுகளை எல்லாம் பேச வேண்டாம்.
* முதன்முறையாக மருத்துவரிடம் செல்வதென்றால் அவரிடம் ‘கூகுள்பே’ போன்ற ‘யுபிஅய்’ வசதி இல்லாமல் இருக்கலாம். அதனால் கையில் எதற்கும் ஒரு தொகையை எடுத்துச் செல்வது நல்லது.
