திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் விவகாரம் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை தகுதிநீக்கம் செய்க! கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆர்ப்பாட்டம்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, டிச.6– கார்த்திகை தீபத்தை கலவர தீபமாக மாற்றிய சங்பரிவார் கும்பல் மீது சட்ட ரீதியான நடவ டிக்கையும், தகுதியற்ற நீதிபதி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கம்யூனிஸ்ட் கட்சி சார் பில் பல்வேறு இடங் களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை பாரிமுனை யில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு, திருப்பரங் குன்றத்தில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் மதச் சார்பின்மைக்கு எதிராக செயல்படும் நீதிபதி சுவாமிநாதனை கண்டித்து முழக்கமிட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம், நீதிபதி சுவாமிநாதன் இதுவரை அளித்த பல்வேறு தீர்ப்புகள், நீதிமன்ற மாண்பை அவமதிக்கும் விதமாக அமைந்திருப்பதாக குற்றச் சாட்டினார்.

நீதிபதி சுவாமிநாதனின் தீர்ப்பு குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் புகார் கடிதம் அளிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேபோல், சென்னைஅசோக்நகர் தபால்நிலையம் அருகே நீதிபதி சுவாமி நாதனை தகுதி நீக்கம் செய்ய வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் தென்சென்னை மாவட்ட செயலாளர் சிவா தலை மையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், ஏராளமானோர் கலந்து கொண்டனர். தமிழ் நாடு அமைதியான மாநிலம். இந்தியாவிற்கு முன்மாதிரியான மாநிலத்தில் மதக் கலவரத்தை ஏற்படுத்த பாஜக, ஆர்எஸ்எஸ் முயற்சி செய்வதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். வடமாநிலங்களில் செய்வது போல வன்முறை அரசியல் செய்ய முயற்சிக்கிறார்கள், தென் மாநிலங்களில்பா.ஜ.க. கொள்கை எடுபடவில்லை என்று அவர்கள் முழக்க மிட்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *