ஆசிரியர் வீரமணியார் வாழ்க! வாழ்கவே!!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

திராவிடர் கழகம்

பேராசிரியர்
மு.நாகநாதன்

12 அகவையிலே பெரியாரைப்

போற்றிய மாணவ மணி!

 

அண்ணாமலை

பல்கலைக்கழகத்தில்

பொருளாதாரம் கற்றுத் தேர்ந்து,

முதல் பரிசை வென்ற தங்கமணி!

 

தந்தை பெரியாரின்

அழைப்பை ஏற்று

வருமானம் ஈட்டும்

வழக்கறிஞர் தொழிலைத் துறந்து

‘விடுதலை’ப் பொறுப்பேற்ற

ஆசிரிய மணி!

சாதியை முறியடித்து

மோகனா அம்மாவை

மணந்த மாமணி!

 

பெரியார் அமைத்த

அனைத்துக் களங்களிலும்

பங்கு பெற்ற வீரமணி!

 

சிறைவாசத்திற்கு அஞ்சாத மணி!

‘மிசா’ கொடுமையை

அச்சமின்றி ஏற்ற கொள்கை மணி!

 

சிறையிலும் எழுத்துப் பணி

தொடர்ந்த உயர் கல்வி மணி!

அண்ணன் ‘மாறன்’ சிறையில்

படைத்த ‘திராவிட வரலாறு’

என்ற நூலுக்குக் குடியரசுத் தரவுகளை,

வழங்கிய ஆய்வு மணி!

 

பொய்யையும் புரட்டையும்

அடுக்குமுறை சாதியையும் புகுத்திய,

‘கீதையின் மறுபக்கம் ‘ கண்டு,

மறுப்பு நூல் எழுதி,

 

ஸநாதன சதியை

முறியடித்த சிந்தனை மணி!

 

சீர்மிகு வாழ்வியலைச்

சுவைக்கும் வண்ணம்

தேன் அருவியாகத் தரும் தமிழ் மணி!

 

அரசியலை, அறிவியலைச்

சட்ட நெறிமுறைகளைக் கசடறக் கற்றுத்

தீர்ப்பு எது? தீர்வு எது? என்று

அன்றாடம் ஒலிக்கும் அறிவு மணி!

 

ஆலயம் தோறும் ஒலிப்பது   ஆரிய மணி!

‘விடுதலை’யில் ஒலிப்பது  திராவிட மணி!

 

பெரியார் கண்டெடுத்த வைரமணி!

 

பேரறிஞர் அண்ணா போற்றிய  பகுத்தறிவு மணி!

அன்றைய முதல்வர் கலைஞருக்குத் துணை நின்ற பண்பு மணி!

 

அன்னை மணியம்மையார்

தலைமை ஏற்ற ஆளுமை மணி!

 

இன்றைய முதல்வர்

திராவிட நல்லாட்சி தரும்

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்குப் பாதுகாவல் அரணாக

நிற்கும் அன்புமணி!

 

93 அகவையிலும்

ஊர் தொடங்கி,

உலக நாடுகள் வரை

பெரியாரிய உயர் எண்ணங்களை

உலகமயமாக்கும் உன்னத மணி

பெரியாரின் சுயமரியாதை மணி

எங்கள் ஆசிரியர் வீரமணியார்

பல்லாண்டுகள் வாழ்க! வாழ்க!!

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *