கும்மிடிப்பூண்டி மாவட்டத்தில் சந்தாக்கள் சேகரிப்பு தீவிரம்

1 Min Read

பொன்னேரி நவ,26- தமிழர் தலை வர் ஆசிரியர் அவர்களின், 91ஆவது பிறந்த நாளில் அவருக்கு பிறந்த நாள் பரிசாக விடுதலை ஏட்டுக்கு அதிகமான  சந்தாக்களை வழங்க கும்மிடிப்பூண்டி மாவட்டத்தில் ஒன்றிய வாரியாக  கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. 

தலைமைக்கழக அமைப்பாளர் வி.பன்னீர்செல்வம், மாவட்டத் தலைவர் த.ஆனந்தன் ஆகியோர் ஒன்றியம் வாரியாக பொறுப்பாளர் களையும் தோழர்களையும் சந்தித் தனர்.

காலையில் பொன்னேரியில் மீஞ்சூர் திராவிடர் கழகப் பொறுப்பாளர் கள் கூட்டம் நடைபெற்றது. இதில் மீஞ்ஞர் ஒன்றியத் தலைவர் அருள், ஒன்றியச் செயலாளர் முருகன், பொன்னேரி நகரச் செயலாளர்  சுதாகர், மாவட்ட மகளிரணிச் செயலாளர் மு.இராணி உள்ளிட்ட பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

சோழவரம் ஒன்றியத்தில் மாவட்ட இளைஞரணி தலைவர் சக்கரவர்த்தி, கஜேந்திரன் உள்ளிட்ட பொறுப்பா ளர்கள் பங்கேற்றனர்.

பின்னர் கும்பிடிப்பூண்டி ஒன்றி யக் கலந் துரையாடல் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் பாஸ்கர், மேனாள் மாவட்டச் செயலாளர் இரமேஷ் மற்றும் ஒன்றிய நகரப் பொறுப்பா ளர்கள் பங்கேற்றனர். எல்லாவரம் ஒன்றியக் கலந்துரை யாடலில் ஒன்றியத் தலைவர் அருண கிரி, மாவட்ட இளைஞரணி செயலாளர் பெரிய பாளையம் ஆகாஷ் பங்கேற்றனர்.

புழல் ஒன்றியக் கலந்துரை யாடல் கூட்டத்தில் ஒன்றியத் தலைவர் சோமு, ஒன்றியச் செயலா ளர் உதயகுமார் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *