புயல் மீட்புப் பணியில் ஈடுபட சென்னையில் 900 தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, நவ. 29– ‘டிட்வா’ புயல் மீட்புப் பணியில் ஈடுபட சென்னை மற்றும் புறநகரில் 900 தீயணைப்புப் படை வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். மேலும், சென்னை காவல் துறையும் களத்தில் இறங்கியுள்ளது.

இலங்கை அருகே உருவாகியுள்ள ‘டிட்வா’ புயல், வட தமிழ்நாடு, புதுச்சேரி, தெற்கு ஆந்திரக் கடலோரப் பகுதிகளை நவம்பர் 30ஆம் தேதி அதிகாலை நெருங்கும். இதை அடுத்து, இன்று (நவம்பர் 29ஆம் தேதி) வட தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.

தீயணைப்பு வீரர்கள்

மீட்புப் பணிகளில் ஈடுபடும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தீயணைப்புத் துறை இயக்குநரான டிஜிபி சீமா அகர்வால் மேற்பார்வையில் அனைத்துத் தீயணைப்பு வீரர்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். மிக முக்கிய காரணங்களைத் தவிர, விடுப்பில் உள்ள அனைவரும் பணிக்குத் திரும்பவும் உத்தரவிடப் பட்டுள்ளது.

மேலும், 900 தீயணைப்புப் படை வீரர்கள் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதி என 17 இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, மழைநீர் அதிகளவில் தேங்கும் இடங்களான ரெட்டேரி சந்திப்பு, வேளச்சேரி ராம் நகர், முடிச்சூர், தாம்பரம், குன்றத்தூர், மணலி புதுநகர், நந்தம்பாக்கம் ஆகிய இடங்கள் அடையாளம் காணப்பட்டு, அங்கு தீயணைப்புப் படை வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ரப்பர் படகு, மரங்களை வெட்டும் கருவிகள் உட்பட மீட்பு உபகரணங்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இதுமட்டுமின்றி, திருவள்ளூர் மாவட்டத்தில் 2 இடங்களிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 2 இடங்களிலும் மீட்பு உபகரணங் களுடன் தீயணைப்பு வீரர்கள் பணியில் உள்ளனர்.

மேலும், பேரிடர் காலங்களில் மக்களைக் காக்கும் வகையில் சென்னை காவல்துறை அமைத்த காவல் பேரிடர் மீட்புப் படையினரும், மீட்பு உபகரணங்களுடன் சென்னையில் உள்ள 12 காவல் மாவட்டங்களிலும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *