மாநிலங்களவைத் தலைவரின் தீர்ப்புகளை விமர்சிக்கக் கூடாதாம் எம்.பி.க்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்த ஒன்றிய அரசு!

1 Min Read

புதுடில்லி, நவ.27- நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் டிசம்பர் 1ஆம் தேதி தொடங்கி 19ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்த கூட்டத் தொடரில் சிவில் அணுசக்தி துறையில் தனியாருக்கு அனுமதி வழங்குவது, இந்திய உயா்கல்வி ஆணையம் அமைப்பது, வணிகத்தை எளிமைப்படுத்த பெருநிறுவன சட்டங்கள் முன்மொழிவது உள்ளிட்ட 10 மசோதாக்களை தாக்கல் செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.

இதனிடையே எஸ்அய்ஆர் உள்ளிட்ட விவகாரங்களை எதிர்க்கட்சிகள் எழுப்பத்திட்டமிட்டுள்ளனர். இதையொட்டி மாநிலங்களவையில் உறுப்பினர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதில், மாநிலங்களவைத் தலைவர் வழங்கும் தீர்ப்புகளை அவைக்கு உள்ளேயோ, வெளியே விமர்சிக்கக் கூடாது, ஒன்றிய அமைச்சர் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்து பேசினால், சம்பந்தப்பட்ட நபர் அவையில் இருக்க வேண்டும். அப்போது மட்டுமே பேச அனுமதிக்கப்படும். இல்லாவிட்டால் அது விதிமீறலாக கருதப்படும். மாநிலங்களவைக்குள் பேனர் உள்ளிட்டவற்றை உறுப்பினர்கள் காண்பிக்கக் கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *