சென்னை, நவ.8- பிற்படுத்தப்பட் டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை சார்பில் பெரம்பலூர், அரிய லூர், இராமநாதபுரம் மாவட்டங் களில் தலா ஒரு மாணவர் விடுதி என்ற வகையில் ரூ.16.13 கோடி மதிப்பீட்டில் மூன்று விடுதிகள் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து அரசு வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-
கல்வியே வளர்ச்சியின் முது கெலும்பு. அனைவருக்கும் கல் வியை உறுதி செய்வதற்காக, குறிப் பாக சமூகத்தின் பின் தங்கிய பிற் படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத் தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையின வகுப்பினைச் சார்ந்த மாணவர்களுக்காக விடு திகள் நடத்தப்படுகின்றன.
அவர்களுக்கு இலவச உணவு மற்றும் தங்குமிடத்திற்கான வச தியை வழங்குவது மட்டுமல்லாமல், அவர்களின் கல்வி மற்றும் தனிப் பட்ட வளர்ச்சிக்கு சாதகமான சூழ்நிலை விடுதிகளில் ஏற்படுத் தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கல்வியின் முக் கியத்துவம் உணர்ந்து பள்ளி மற் றும் கல்லூரிகளில் கல்வி பயிலும் மாணவ / மாணவியரின் நலனைக் கருத்தில் கொண்டு பிற்படுத்தப்பட் டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின் மூலம் 1350 பள்ளி, கல் லூரி விடுதிகள் இயங்கி வரு கின்றன. இவற்றுள் 1271 விடுதிகள் அரசு சொந்தக் கட்டடங்களில் இயங்கி வருகின்றன. எஞ்சிய 79 விடுதிகள் வாடகை கட்டடங்களில் இயங்கி வருகின்றன.
வாடகை கட்டடங்களில் இயங்கி வரும் விடு திகளுக்கு சொந்தக் கட்டடங்கள் கட்ட அரசு முனைப்பாக செயல் பட்டு வருகிறது.
இதன்படி 2023-2024-ஆம் ஆண்டு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் அவர்களால் மூன்று விடு திகளுக்கு ரூபாய் 16.13 கோடி செல வில் சொந்தக் கட்டடங்கள் கட் டப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.
மேற்காணும் அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக கீழ்க்கண்ட மூன்று விடுதிகளில் மொத்தம் 250 மாணவ / மாணவியர் தங்கும் வகையில் ரூ.16.13 கோடி செலவில் சொந்தக் கட்டடம் கட்ட அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
1. பெரம்பலூர் மாவட்டம், வேப்பூரில் 100 மாணவிகள் தங்கும் வகையில் பிற்படுத்தப்பட்டோர் நலக் கல்லூரி விடுதி.
2. அரியலூர் மாவட்டம், மீன் சுருட்டியில் 50 மாணவர்கள் தங் கும் வகையில் மிகப் பிற்படுத்தப்பட் டோர் நலப் பள்ளி விடுதி.
3. இராமநாதபுரம் மாவட்டம், கமுதி, கோட்டைமேட்டில் 100 மாணவிகள் தங்கும் வகையில் சீர்மரபினர் நலக் கல்லூரி விடுதி.
-இவ்வாறு தமிழ்நாடு அரசின் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட் டுள்ளது.