பெரியார் பிறந்த நாள்-பேச்சுப் போட்டியில் வென்ற கல்லூரி மாணவர்களுக்குப் பரிசளிப்பு விழா

1 Min Read

முட்டம், நவ. 17- தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு  கன்னியாகுமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பாக  நடைபெற்ற கல்லூரி மாணவர்களுக்கான  பேச்சுப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா குமரிமாவட்டம் முட்டம் ஆயர் ஆஞ்ஞிசுவாமி கல்வியியல் கல்லூரியில் வைத்து கல்லூரி தாளாளர் பணி.ஆல்வின் மதன் ராஜ் விழாவினை தொடக்கி வைத்தார். கழக மாவட்டத் தலைவர்  மா.மு.சுப்பிரமணியம்,  பகுத்தறிவாளர்கழக மாவட்டத் தலைவர் உ.சிவதாணு, கழக பொதுக்குழு உறுப்பினர் மு.இராசசேகர் கழக காப்பாளர் ம.தயாளன், துணைத்தலைவர் ச.நல்ல பெருமாள் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

குமரி மாவட்ட கழகச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன் பரிசுகள் வழங்கி மாணவர்களைப் பாராட்டினார்.

கல்லூரி முதல்வர் சா.ஜாஸ்மின் ஷீலா பேர்ணி தலைமை தாங்கினார். இந்த பேச்சுப்போட்டியில்  பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும்  பெரியாருடைய வரலாறு குறித்த நூல்களும் வழங்கப்பட்டன. பரிசுகள் வழங்க மதுரை மாவட்ட கழகக் காப்பாளர் பெரியார் பெருந்தொண்டர் சே.முனியசாமி ரூ.5000வழங்கினார்.

மாவட்ட இளைஞரணித் தலைவர் இரா.இராஜேஸ் நன்றி கூறினார்.

விழாவில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பெரியாருடைய நூல்கள் வழங்கப்பட்டன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *