மின் துறைப் பொறியாளர்கள் எச்சரிக்கை
சென்னை, நவ.5- ஒன்றிய அரசின் புதிய மின்சார சட்டத் திருத்தத்தின் மூலம் வீட்டு உபயோக மின்சாரக் கட்ட ணம் 80 சதவீதம் உயரும் என மின்துறை பொறியாளர் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
கட்டணம் உயரும்
சென்னை சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றத்தில் தமிழ்நாடு மின்துறை பொறியாளர்கள் அமைப்பின் தலைவர் காந்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
6-ஆவது முறையாக ஒன்றிய அரசு மின்சார சட்டத் திருத்தத்தை கொண்டு வரவுள்ளது. கடந்த 5 திருத்தங்களையும் அனைத்து மாநிலங்களும் கடுமையாக எதிர்த்ததால் கைவிடப்பட்டன. தற்போது கொண்டு வரும் சட்டத் திருத்தம் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொதுத்துறை வினியோக நிறுவனங்களின் சொத்துகளை தனியாருக்கு விற்க வழிவகுக்கும்.
மேலும், இந்த சட்டத் திருத்தம் ரயில்வே, மற்றும் தனியார் உற்பத்தி தொழில்களுக்கான மின்சாரத்தின் விலையை 20 சதவீதம் குறைப்பதுடன், வீட்டு உபயோக மின்கட்டணத்தை 80 சதவீதம் உயர்த்தும்.
தமிழ்நாடு அரசு ஏற்கிறதா?
புதிய சட்டத்திருத்தங்களுக்கு, வினியோக நிறுவனங்களின் கடனை ஒன்றிய அரசு காரணமாக காட்டுகிறது. ஆனால், வினியோக நிறுவனங்களின் இழப் பிற்கு ஒன்றிய அரசு தனியாருக்கு சாதக மாக வகுத்த மின்சார கட்டணக் கொள்கைகளும், விதி களுமே காரணம். ஏற்ெகனவே, மின்துறையில் உற்பத்தி நிறுவனங்கள் தனியாரிடம் கொடுக்கப்பட்டு விட்டது.
தற்போது வினியோக நிறுவனங்களையும் தனியாரிடம் ஒப்படைக்கும் வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனால், மின்சாரம் என்பது சாதாரண மக்களுக்கு எட்டாக்கனியாக மாறிவிடும். எனவே, ஒன்றிய அரசு மின்சார சட்டத் திருத்தத்தை உடனடியாக கைவிட வேண்டும். தமிழ்நாடு அரசு இந்த சட்டத் திருத்தத்தை ஏற்கிறதா? அல்லது எதிர்க்கிறதா? என்று தெளிவுப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
