மின் கொள்முதல் விவகாரங்கள் முறைகேடுகள் இருந்ததால் அதானி குழுமத்துடனான ஒப்பந்தம் ரத்து வங்கதேசம் திட்டவட்டம்

1 Min Read

டாக்கா, நவ. 5- கடந்த ஆண்டு பிரதமர் ஷேக் ஹசீனா தலை மையிலான அரசு பதவி நீக்கம் செய்யப்பட்ட பின் அதானி பவர் மற்றும் வங்கதேசம் இடையேயான 2017ம் ஆண்டு மின்விநியோக ஒப்பந்தம் மறுஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. மறுஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட தேசிய மறுஆய்வுக் குழு தனது இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. குழுவின் தலைவர் மொய்னுல் இஸ்லாம் சவுத்ரி கூறுகையில், மின்சார கொள்முதல் ஒப்பந்தங்களை மறுஆய்வு செய்யும்போது மிகப்பெரிய ஊழல், கூட்டுச்சதி, மோசடி , முறைகேடுகள் மற்றும் சட்டவிரோதங்கள் இருப்பதை கண்டறிந்தோம்” என்றார்.

இது தொடர்பாக எரிசக்தி விவகார ஆலோசகர் முகமது பவுசல் கபீர் கான் கூறுகையில், ‘‘பொதுவாக ஒப்பந்தங்களில் எந்த ஊழல்களும் நடக்கவில்லை என்று கூறுகின்றன. ஆனால் வேறுவிதமாக ஊழல் அல்லது முறைகேடுகள் நிரூபிக்கப்பட்டால் ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கு தயங்கமாட்டோம்” என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *