தமிழர் தலைவர் கருத்தை ஏற்று தமிழ்நாடு அரசு ஆணை!

1 Min Read

மருத்துவமனைகளில் ‘நோயாளிகள்’ என்ற சொல்லுக்கு மாற்றாக ‘‘மருத்துவப் பயனாளிகள்’’ என்று அழைக்கலாம்!

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி 29.7.2025 அன்று கீழ்க்கண்ட கருத்தினை வெளியிட்டார்.

‘‘மருத்துவமனைகளில் ‘நோயாளிகள்’ (Patients) என்று தற்போது புழங்கி வரும் சொல்லுக்கு மாற்றாக,

‘‘மருத்துவப் பயனாளிகள்’’ (MEDICAL BENEFICIARIES) என்ற சொல்லைப் பயன்படுத்தினால், அவர்களிடம் (நோயாளிகளிடம்) உள்ள நம்பிக்கைக் குறைவு சற்று மாற வாய்ப்புண்டு.

முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சியில், ‘மாற்றுத் திறனாளிகளாக’ மாற்றி (‘உடல் ஊனமுற்றோர்’ என்பதைத் தவிர்த்து) ஒரு தன்னம்பிக்கையை ஊட்டியதுபோல, தங்களது ‘திராவிட மாடல்’ ஆட்சியில், இது தங்களுக்கு ஏற்கத்தக்கதாக இருந்தால், ஆணை பிறப்பிக்கலாம்’’ என்று கருத்துக் கூறியிருந்தார்.

இதனை ஏற்று முதலமைச்சரின் அறிவுறுத்தல்படி, மக்கள் நல்வாழ்வுத் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *